கோவை உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை - சப்ளையர் கைது

கோவை உடையாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 7) உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த மங்கையநேந்தல் ஊரைச் சேர்ந்த சரவணன் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார். சரவணன் அங்குள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள சந்தையில் மது விற்றதாக இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...