கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை பணிகள் தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நாயக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் PRG அருண்குமார் MLA முன்னிலையில் தொடங்கியது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கம்பாளையம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



முதல் திட்டத்தின் கீழ், சபரி நகர் முருகன் வீடு முதல் ரங்கசாமி வீடு வரை மற்றும் திரிங்கா நகர் ரங்கராஜ் வீடு முதல் தினகரன் வீடு வரை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இரண்டாவது திட்டத்தின் கீழ், பாலமலை மெயின் ரோடிலிருந்து அசோகன் வீடு வரையில் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.



இந்த இரண்டு திட்டங்களுக்கும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான PRG அருண்குமார் MLA அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி, கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாலை திட்டங்கள் நிறைவடைந்தால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...