கோவையில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க அக்டோபர் 19, 2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமே ஏற்கப்படும்.



கோவை: கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-ன் கீழ் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற வேண்டும்.

ஏற்கனவே செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6, 2024 வரை இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது, சென்னை அரசு முதன்மைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 19, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெடிபொருள் சட்டவிதிகள் 2008 விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அக்டோபர் 19-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, அதற்கான தகவலை இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அனுமதியின்றி அல்லது உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...