கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 206 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி விழாவில் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.



Coimbatore: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி 206 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.



இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயகர் கனகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...