உடுமலையில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சொத்து வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் கஞ்சா மற்றும் மது போதை பிடியிலிருந்து கல்லூரி மாணவர்களை காப்பாற்றுவோம்", "வேதனையாச்சி வேதனையாச்சு விடியா தி.மு.க ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சு", "கெட்டுப் போச்சு கெட்டுப் போச்சு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு", "ஏறிப்போச்சு ஏறிப்போச்சு மின் கட்டண வரி சொத்து வரி ஏறி போச்சு" போன்ற கோஷங்களை எழுப்பினர்.



மேலும், சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கண்டித்து, "ஸ்டாலின் அரசே பதவி விலகு" என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், பிரனேஷ் மற்றும் நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...