கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு போத்தனூரில் நடைபெற்றது. 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 'மகளிர் மாநாடு' இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



நாட்டில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் அகில இந்திய அளவில் பரப்புரையை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இப்பரப்புரையின் மாநில அளவிலான இறுதி நிகழ்வாக இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் உமர் ஃபாரூக் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநாட்டில், 'வேலிதாண்டும் வெள்ளாடுகள்' என்ற தலைப்பில் தற்கால குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ தனது உரையில், "மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட முடியும். அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "மது, போதை உள்ளிட்ட தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில், இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நமது கடமை" என்று வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், முக்கிய ஆளுமைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...