நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு விதிகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனைத்தொடர்ந்து, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
இருப்பினும் அதிகாரிகளின் உத்தரவின்படி கட்டிடங்கள் வரன்முறைப்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் குன்னூர் நகராட்சியின் மூலம் அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இதில் நகர அமைப்பு அலுவலர் சுடலையாண்டி ரவி மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.