ஆயுத பூஜை - தசரா பண்டிகைக்கு 140 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சேவை

ஆயுத பூஜை - தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 9 முதல் 11 வரை மூன்று நாட்களுக்கு இந்த சேவை தொடரும்.


Coimbatore: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு நல்ல செய்தி. ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்து சேவை தொடரும். மொத்தம் 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு 100 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 40 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ஏற்பாடு தொடர் விடுமுறை காலத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...