கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 80 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 64 மனுக்களுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இந்த குறை தீர்ப்பு முகாமில் மொத்தம் 80 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும், ஒரு மனு மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
எஞ்சிய 15 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இந்த குறை தீர்ப்பு முகாம் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணவும் உதவுகின்றன.
இந்த குறை தீர்ப்பு முகாமில் மொத்தம் 80 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும், ஒரு மனு மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
எஞ்சிய 15 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இந்த குறை தீர்ப்பு முகாம் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணவும் உதவுகின்றன.