காரமடை நகரில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பொதுக்கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தேர்தலில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.



காரமடை நகர கழகத்திற்குட்பட்ட பகுதிகளில், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நன்றி தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ரவி, நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் T.R.சண்முகசுந்தரம், மாவட்ட அவை தலைவர் புருஷோத்தமன், காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காரமடை நகராட்சி, வார்டு எண்-17, சாஸ்திரி நகர் பகுதியில் ரூபாய் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய பொதுக்கழிப்பிட கட்டிடத்தை எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்.



மேலும், வார்டு எண்-23 கார் ஸ்டேண்ட் அருகில் ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யானசுந்தரம், சுரேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...