பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்தை கொல்ல சதி முறியடிப்பு - வங்கதேச குற்றவாளிகள் கைது

கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம், பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவர். மேலும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை கடுமையாக எதிர்த்து போராடியவர் முருகானந்தம். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.

கடந்த சில வாரங்களாக, மேற்கு வங்கத்திலிருந்து ஊடுருவிய இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரிலும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாசவேலைகளை செய்த இந்தக் கும்பல், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, முருகானந்தத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த தகவல் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...