ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை கால விடுமுறையினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் நிலகிரி, குன்னூர் பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர்.
இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், காட்சிமுனை, படகுஇல்லம், பூங்கா அகிய பகுதிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அப்பகுதிவாசிகளால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா வாகனங்களையே நாடிச்செல்வர்.
இந்நிலையில், தற்போது பல்வேறு சமவெளிப்பகுதிகளிலும் தனியார் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகளின் வாகனங்களை நாடுவது குறைந்துவிட்டது.
இதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் வருமானமின்றி பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
குன்னூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குன்னூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், காட்சிமுனை, படகுஇல்லம், பூங்கா அகிய பகுதிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அப்பகுதிவாசிகளால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா வாகனங்களையே நாடிச்செல்வர்.
இந்நிலையில், தற்போது பல்வேறு சமவெளிப்பகுதிகளிலும் தனியார் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகளின் வாகனங்களை நாடுவது குறைந்துவிட்டது.
இதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் வருமானமின்றி பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
குன்னூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குன்னூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.