திமுகவின் மூத்த தலைவர் முரசொலி செல்வம் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுகவின் மூத்த தலைவரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் (84) அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திமுகவின் மூத்த தலைவரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் (84) அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார்.

முரசொலி மாறனின் சகோதரரும், கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். முரசொலியை திமுகவினரை தாண்டி, சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்த முரசொலி செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், "என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தை தாக்கி வேதனை குருதியை வடிய செய்கிறது. கருணாநிதி மறைந்த பிறகு சாய்வதற்கு கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திமுகவின் மூத்த தலைவரான முரசொலி செல்வத்தின் மறைவு கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...