கோவை வேளாண் பல்கலையில் மருத்துவ தாவரங்கள் பயிற்சி: விவசாயிகள், தொழில் முனைவோருக்கு அழைப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 18ம் தேதி மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. விவசாயிகள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறை சார்பில் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று "மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள்" குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள், அறிவியல் பட்டதாரிகள், நாற்றங்கால் உரிமையாளர்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் மகளிர் பங்கு கொண்டு பயனடையலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் முக்கியமான அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை பரப்புவதாகும். இதன் மூலம் தரமான நடவுப் பொருட்களுடன் உயர்தர மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதோடு, புதிய தொழில் முனைவோருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர முடியும்.

இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1,000 ஆகும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98429-31296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...