கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி காவல்துறையினர், இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தனர்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை இதுவரை சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களக்க பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகயில், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை துன்புறுத்தி வருகின்றனர். பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கின்றனர்.
விசாரணை என்ற பெயரில் பல முறை தொடர்ச்சியாக அழைத்து பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்று பல நாட்கள் வைத்துக்கொள்கின்றனர். போனில் யாருடன் பேசினாலும் விசாரித்து மனவுளைச்சளை ஏற்படுத்துகின்னர்" என்றனர்.
மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் சசிக்குமார் வழக்கை முடிக்கவில்லை என்பதால் பண ஆசை காட்டி இஸ்லாமியர்களை குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கின்றனர் என புகார் அளிக்க வந்த பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இஸ்லாமிய இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல்ராஜிடமும் இதுகுறித்தான மனுவினை அளித்தனர்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை இதுவரை சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களக்க பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகயில், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை துன்புறுத்தி வருகின்றனர். பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கின்றனர்.
விசாரணை என்ற பெயரில் பல முறை தொடர்ச்சியாக அழைத்து பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்று பல நாட்கள் வைத்துக்கொள்கின்றனர். போனில் யாருடன் பேசினாலும் விசாரித்து மனவுளைச்சளை ஏற்படுத்துகின்னர்" என்றனர்.
மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் சசிக்குமார் வழக்கை முடிக்கவில்லை என்பதால் பண ஆசை காட்டி இஸ்லாமியர்களை குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கின்றனர் என புகார் அளிக்க வந்த பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இஸ்லாமிய இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல்ராஜிடமும் இதுகுறித்தான மனுவினை அளித்தனர்.