உலக பார்வை தினம்: கோவை துடியலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை துடியலூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.



கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக உலக பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



துடியலூர் சிக்னலில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக பார்வை தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு I மற்றும் II சார்பில் துடியலூர் பேருந்து நிலைய சந்திப்பில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா முன்னிலை வகித்தார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா, உதவி ஆய்வாளர் ஜி.குருகணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் துரை, சவிதாமணி, மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் முகப்பு பகுதியில் புல்ஸ்ஐ கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்கள் எஸ்.கார்த்திக் மற்றும் சி.வினு ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...