கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 41-வது வார்டுக்குட்பட்ட கணபதி, பாரதி நகர் பகுதிகளில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும், கணபதி, பாரதி நகர் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, இராமகிருஷ்ணாபுரம், சக்தி ரோடு பகுதியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாரியம் மற்றும் மூடு பலகை அமைக்கும் பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையருடன் நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும், கணபதி, பாரதி நகர் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, இராமகிருஷ்ணாபுரம், சக்தி ரோடு பகுதியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாரியம் மற்றும் மூடு பலகை அமைக்கும் பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையருடன் நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.