கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: தினமலர் அணி சாம்பியன்

கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை: கோவை மாநகர போலீஸ் மற்றும் 'ஸ்பார்க்கிளிங் ஈவென்ட்ஸ்' இணைந்து நடத்திய அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ், விமானப்படை, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம், வருமான வரித்துறை, 110 பட்டாலியன், வணிக வரித்துறை, மீடியா 11, கோவை பிரஸ் கிளப் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.

அக்டோபர் 9 அன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற தினமலர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் துவக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். 20 ஓவர்களில் தினமலர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு ஆடிய துணை கமிஷனர் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டி.எல்.எஸ். முறைப்படி தினமலர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினமலர் அணியின் விஜய் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் அணி மூன்றாம் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...