ஆயுதபூஜை விடுமுறை: கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் அக்டோபர் 10 அன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.11,000 வரை அதிகரித்துள்ளது.


கோவை: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் இன்று (அக்டோபர் 10) அதிரடியாக உயர்ந்துள்ளது.

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக இருப்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பேருந்துகள், ரயில்கள் நிரம்பி வழியும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான சேவைகளின் டிக்கெட்டும் அதிகரித்துள்ளது.

சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.3,300 என்ற அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.5,000 வரை இருந்து வந்த கட்டணம் தற்போது ரூ.11,700 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...