கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 45 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை காரமடை பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 45 வயது கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை காரமடை பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றில், 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 45 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரமடை பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் பயமடைந்த சிறுமி, இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் உறவினர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது.

தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விசாரணையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கூலித்தொழிலாளி பத்திரசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பத்திரசாமி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 10 அன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...