கோவை மாநகராட்சி: ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. பட்டகே வீதியில் உள்ள ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு அகற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் உள்ள பட்டகே வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு ஆகியவை அகற்றப்பட்டன. ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அக்டோபர் 10 அன்று மீட்டனர்.

56வது வார்டில் உள்ள ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் அடப்பக்காடு அருகில் 5.58 சென்ட் பரப்பளவு கொண்ட ரோட்டில் இந்த ஆக்கிரமிப்புகள் இருந்தன. பொது கிணறு உபயோகிக்கும் இடத்தில், 161 சதுர மீட்டர் அளவில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தாமாக ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. மாறாக, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரையப்பத்திர நகலை சமர்ப்பித்தனர்.

நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் மாநகராட்சி ரோட்டும் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றினர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்க பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொது கிணறு அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...