கோவையில் ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா கோலாகலம்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் விஜயதசமி நாளில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வேசுக்கோ, தீசுக்கோ கோஷங்கள் எழுப்பினர்.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நடைபெறும் கத்தி போடும் திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஆண்டு, கோவை சாய் பாபா காலணியில் உள்ள விநாயகர் கோவிலில் காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.



இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஊர்வலம் சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.



பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.



வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டவுன்ஹாலில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...