திருப்பூரில் விஜயதசமி: 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்வு

திருப்பூரில் விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் வித்யாரம்ப நிகழ்வு நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளின் நாவில் 'ஓம்' எழுதப்பட்டு, அரிசியில் 'அ' எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 13-ம் ஆண்டு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்வு நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கி, 10-ம் நாளான விஜயதசமி அன்று வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு 'ஓம்' எனும் வார்த்தை எழுதப்பட்டது. மேலும், பச்சரிசியில் 'அ', 'ஆ' என குழந்தைகளின் கை பிடித்து எழுதும் நிகழ்வும் நடைபெற்றது.

விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றி தரும் என்பது நம்பிக்கை. அதன்படி, குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் போன்றவற்றை இந்நாளில் தொடங்குவது வழக்கம்.



வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தை தந்தை, தாத்தா அல்லது மாமாவின் மடியில் அமர வைக்கப்பட்டு, அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் கை பிடித்து 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.



இந்த வித்யாரம்பம் நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குழந்தைகளின் கல்வி வாழ்க்கையின் தொடக்கமாக கருதப்படுகிறது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...