மோசடி வழக்கில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரின் மாமனார் உள்பட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்துசாமி மகன் துரைசாமி. இவரின் சகோதர்கள் சுந்தரம் மற்றும் தனபால். இந்த மூவரும் பங்குதாரராக உள்ள வணிக வளாகம் கோவை அவிநாசி சாலையில் உள்ளது.இந்நிலையில் வணிக வளாகத்தின் ஒப்பந்த பத்திரத்தில் துரைசாமியின் பெயரை நீக்கி புதியதாக பத்திரத்தை சுந்தரம் மற்றும் தனபால் தயார் செய்துள்ளனர். மேலும், துரைசாமிக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தனர். ஒப்பந்த பத்திரத்தில் பெயரை நீக்கியும், வணிக வளாகம் மூலம் கிடைக்கும் வருவாயை தனக்கு தராமல் மோசடி செய்ததாக துரைசாமி, கடந்த 2001-ஆம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி,ஒப்பந்தத்தை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வேலுசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், சுந்தரம், தனபால் ஆகியோர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங் காவல் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதில், சுந்தரம், தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...