கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்துசாமி மகன் துரைசாமி. இவரின் சகோதர்கள் சுந்தரம் மற்றும் தனபால். இந்த மூவரும் பங்குதாரராக உள்ள வணிக வளாகம் கோவை அவிநாசி சாலையில் உள்ளது.இந்நிலையில் வணிக வளாகத்தின் ஒப்பந்த பத்திரத்தில் துரைசாமியின் பெயரை நீக்கி புதியதாக பத்திரத்தை சுந்தரம் மற்றும் தனபால் தயார் செய்துள்ளனர். மேலும், துரைசாமிக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தனர். ஒப்பந்த பத்திரத்தில் பெயரை நீக்கியும், வணிக வளாகம் மூலம் கிடைக்கும் வருவாயை தனக்கு தராமல் மோசடி செய்ததாக துரைசாமி, கடந்த 2001-ஆம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி,ஒப்பந்தத்தை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வேலுசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், சுந்தரம், தனபால் ஆகியோர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங் காவல் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதில், சுந்தரம், தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வேலுசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், சுந்தரம், தனபால் ஆகியோர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங் காவல் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதில், சுந்தரம், தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.