கோவை சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கோவையில் அதிவேக செப்டிக் டேங்க் லாரி கார் மற்றும் இரு பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் நேற்று (அக்டோபர் 12) நடந்த கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிவேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று கார் மற்றும் இரு பாதசாரிகள் மீது மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்தது.

புளியகுளம் பகுதியைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் தனது நண்பருடன் சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று முதலில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. பின்னர் அதே லாரி சாலையோரம் நடந்து வந்த மருதாசலம் மற்றும் அவரது நண்பர் மீதும் மோதியது.

இந்த மோதல் காரணமாக கார் மீது தூக்கி வீசப்பட்ட மருதாசலம், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



விபத்தை ஏற்படுத்திய செப்டிக் டேங்க் லாரியின் ஓட்டுநரான பிரவீன் என்ற இளைஞரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...