முரசொலி செல்வம் மறைவு: பல்சமய நல்லுறவு இயக்கம் இரங்கல்

முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான குரலாக விளங்கிய முரசொலி செல்வத்தின் சேவைகளை அவர் பாராட்டியுள்ளார்.


தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவருமான ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியின் குரலாக, சமூக நீதிக்கான குரலாக ஒலித்த முரசொலி செல்வம் அவர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும். மண்ணில் மறைந்தாலும் மனதில் நிரந்தரமாக வாழும் ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு புகழ் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட இயக்கங்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், "மனித சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் நீங்க, சமத்துவம் தழைத்தோங்க களமாடியது திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்களின் சமூக செயல்பாடுகளையும், சமூக அவலங்களை அடியோடு ஒழிக்க ஓயாது ஒலிப்பது முரசொலி நாளிதழ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி செல்வத்தின் பங்களிப்பை விவரித்த அவர், "சமூக நீதி பத்திரிகையாளராக, திராவிட இயக்க எழுத்தாளராக திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட மகத்தான ஆளுமையாக விளங்கினார். மொழிப்போரில் முன் நின்ற, முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலை சிறந்தவர்களில் ஒருவரான முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், 'சர்க்காரியா கமிஷன் - ஒரு சூழ்ச்சி வலை', 'சில நினைவலைகள்' போன்ற நூல்களை எழுதி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்" என்று பாராட்டியுள்ளார்.

இறுதியாக, "மீளா துரயரில் ஆழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் குடும்பத்தாருக்கும், முரசொலி குழுமத்துக்கும், திராவிட இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலக தமிழ் நெஞ்சங்களுக்கும் பல்சமய நல்லுறவு இயக்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து, கண்ணீருடன் புகழ் அஞ்சலியை காணிக்கையாக்க விளைகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...