கோவை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைகளை நிகழ்த்தினர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கிடசாமி சாலையில் உள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் (Sharathkala Navarathiri Mahotsavam) திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.



இந்நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



திருவீதி உலாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.



அவர்கள் கொம்பு, நையாண்டி மேளம், செண்டை மேளம், காவடியாட்டம், தெய்யம், காளி ஆட்டம், திரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக்காட்டினர்.



இந்த ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை, பெரியசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



மேலும், பல்வேறு வேடம் அணிந்து கொண்டு நடனம் ஆடியபடி ஊர்வலமாகச் சென்ற கலைஞர்களை அனைவரும் மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர். ஊர்வலம் சென்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை ஒன்றிணைத்து கொண்டாடிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...