உடுமலை அருகே ஆண் குழந்தையை கடத்திய பெண் சேலத்தில் கைது

உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் 2 வயது ஆண் குழந்தையை காரில் கடத்திச் சென்ற பெண், சேலத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ஆண் குழந்தையை காரில் கடத்தி சேலத்திற்கு தப்பியோடிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த அமுதா (30) என்பவர் தனது 2 வயது மகன் நிகில் கேசவனுடன் வேலை தேடி சேலம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அமுதா (39) மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த இந்திராணி (43) என்பவருடன் அறிமுகமானார்.

இந்திராணி, அமுதாவை அழைத்துக் கொண்டு உடுமலை பகுதிக்கு வந்தார். முக்கோணம் அருகே அமுதா இயற்கை உபாதைக்குச் சென்றபோது, இந்திராணி குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார். அமுதா உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக செயல்பட்ட உடுமலை போலீசார், சேலம் அரசு மருத்துவமனை அருகே இருந்த இந்திராணியை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனர். குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்திய இந்திராணியிடம் உடுமலை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...