சென்னையில் திடீர் நெஞ்சுவலியால் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Chennai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் M.K. Stalin, துணை முதல்வர் Udhayanidhi Stalin, தமிழக அரசின் அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், கடந்த மே மாதம் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், மற்ற அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது.

கோவை சிறையில் இருந்து விடுதலையான பின்னர், சவுக்கு சங்கர் மீண்டும் அதே வீரியத்துடன் செயல்பட போவதாக அறிவித்தார். அதன்படி, தற்போது ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் அவர் வழக்கம் போல் பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 12 அன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் தற்போது வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அவதூறு வழக்கில் கோவை சிறையில் இருந்த போது, தனது கை போலீசாரால் உடைக்கப்பட்டது என்றும், சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததாகவும் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...