பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு: தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் மற்றும் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலை மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று (அக்டோபர் 13) காலை 6 மணி நிலவரப்படி 91.50 அடியாக உள்ளது.

மேலும் அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையிலிருந்து நீர் திறப்பு ஏதுமில்லை. இன்று காலை 6 மணி நிலவரப்படி குந்தாவில் 37, கெத்தையில் 46, பரளியில் 28, பில்லூர் அணை பகுதியில் 21, அவலாஞ்சி பகுதியில் 15 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (அக்டோபர் 12) 9 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 86.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தற்போது அணையின் நீர் மட்டம் 91.50 அடியாக ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...