அன்னூர் அருகே தனியார் லாட்ஜில் ஆன்லைன் விபச்சாரம்: மேலாளர் உள்பட இருவர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கீரநத்தம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதியில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநத்தம் பகுதியில் 'வோன்டர் பாரடைஸ்' என்ற பெயரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் ஓயோ செயலி மூலம் அறை புக் செய்து வெளியூரிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளரிடம், விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்க்கீஸ் ஆகியோர் ஆன்லைன் மூலம் பெண்களை புக் செய்து தருவதாகக் கூறி, விபச்சாரத்திற்கு தூண்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்கீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஐ.டி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள சரவணம்பட்டி, கீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரம் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...