அன்னூர் அருகே அறுந்த மின் கம்பி: பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரியாம்பாளையம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான ஒன்னக்கரசம்பாளையத்தில், சாலையூர் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில், மின் வழித்தடத்தில் உள்ள ஒரு கம்பி 90 சதவீதம் அறுந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகளோ இதனை பொருட்படுத்தாமல், அந்த மின் கம்பி அறுந்துள்ள இடத்தில் உள்ள விவசாய தோட்ட உரிமையாளரே தனது சொந்த செலவில் சரி செய்து கொள்ள வேண்டும் என கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அரசுத்துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழலில், மின்வாரிய அதிகாரிகளின் இந்த அலட்சியம் மனித உயிர்களை பறிக்கும் முன் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஊர் மக்கள் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணை முதல்வர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறும் நிலையில், மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...