குடிநீர் விநியோகம் குறித்து தவறான தகவல் - சூலூர் தென்றல் நகர் மக்கள் குற்றச்சாட்டு

சூலூர் கலங்கள் பஞ்சாயத்து தென்றல் நகர் மக்கள் குடிநீர் விநியோகம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் கோரி போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: சூலூர் கலங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

தென்றல் நகர் மக்கள் ஏற்கனவே குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில், தற்போது முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான பதில் அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை பரிசீலித்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 50க்கும் மேற்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பொதுமக்கள் கூறுகையில், "அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், எங்கள் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கக் கோரியும் பல முறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், அவர்கள் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...