குறிச்சி பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத மாநகராட்சியினைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை தாங்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலி குடங்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், ஆனால் குறிச்சி பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். 

மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும், மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மக்களை ஒருமுறை கூட பார்க்க வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...