கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் மழைநீர் வடிகால், சாலை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ PRG. அருண்குமார் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார்.



பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாய்க்கன்பாளையம் 1-வது வார்டு மருதமலை அடிவாரம் சிவசாமி விபூதி ஸ்டோர்ஸ் அருகில் ரூ.8,20,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.



இதேபோல், கஸ்தூரிநாய்க்கன்பாளையம் வார்டு 11-ல் ரூ.6,70,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.



நச்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூரில் ரூ.14,00,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.



மேலும், பன்னீர்மடை ஊராட்சி, தாலியூர் N.A.M நகர் பகுதியில் ரூ.9,95,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





இதனிடையே, பன்னீர்மடை ஊராட்சி, கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை எம்எல்ஏ PRG. அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த ஆய்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...