கல்வி மற்றும் மருத்துவ துறையில் எஸ்என்ஆர் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்என்ஆர் டிரஸ்ட் மற்றும் ஜிஇ ஹெல்த்கேர் இணைந்து மருத்துவ தொழில்நுட்ப துறையில் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மருத்துவ துறையில், மருத்துவ பணியாளர்களின் திறன் பற்றாக்குறையை போக்க இது வழி வகுக்கும். இதற்கான அறிவிப்பை, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஆர்.விஜயக்குமார் முன்னிலையில், ஜிஇ ஆப்பிரிக்க இன்டியா, தெற்காசிய பிரிவின் கல்வி மற்றும் தொழில் சேவை பிரிவின் தலைவர் மாருத் செடியா, விப்ரோ ஜிஇ ஹெல்த்கேர் தலைமை செயல் அலுவலர் மந்தீப் குமார் ஆகியோர் வெளியிட்டனர்.



இந்தியாவில், மருத்துவத் துறையில் பயிற்சியும், திறன் மேம்பாடும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்த ஒப்பந்தமானது, மருத்துவ பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதாக இருக்கும். இப்பயிற்சிக்கென ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜிஇ மருத்துவ கல்வி நிறுவனம், ஒரு “அதிநவீன மருத்துவ தூண்டுதல் ஆய்வகம் ஒன்றை வடிவமைத்து, மேம்படுத்தி, கல்வி வகுப்புகளை நடத்த உள்ளது. இதில், கல்வி மற்றும் பயிற்சிகள் ஒருங்கிணைந்து நடத்தப்படும்.

முதல் கட்டமாக, ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின் பயோமெடிக்கல் பிரிவு மாணவர்கள், இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி பயிற்சி பெற உள்ளனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் செவிலியர் மாணவியர், வெளி நாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் இதில் பங்கேற்று திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஆவரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, புதுடில்லி ஆர்.கே புரம் சம்விகாரில் உள்ள மெடிபாக் ஹல்த்கேர் குழுமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைககளுக்கான இந்த ஒப்பந்தத்தில், புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மூலக்கூறு உயிரியியலில் ஒரு சிறந்த மையத்தை உருவாக்கும் திட்டம். செவிலயர் கல்வியில் பயிற்சியாளர்களை உருவாக்க, மென் திறன், நோயாளிகளை பரிவுணர்வோடு கையாளுதல், கிளினிக்கல் திறன் உள்ளிட்டவைகளை நேரடி செயல் விளக்கத்தில் பயிற்சி அளித்து உருவாக்குதல் போன்றவை இடம் பெறும்.

ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களான ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

கோவையில் தன்னாட்சி உரிமை பெற்றுள்ள ஒரு கல்வி நிறுவனமாக திகழும் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, 1994ல் துவக்கப்பட்டு, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வட்டமலை பாளையத்தில் உள்ள இந்த கல்லூரியில், 9 இளநிலை பட்டப்படிப்பும், 8 முதுநிலை பட்டப்படிப்பும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், முதுநிலை மேலாண்மை நிர்வாகவியில் மற்றும் ஆராய்ச்சி கல்விகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிறுவனமானது, உலக அளவில் சிறந்த 5 பல்கலைக்கழகத்துடன் ஒன்றான, பின்லாந்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஹெல்ஸின்கி பல்கலைக் கழகத்துடன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக 300 பாடப்பிரிவுகளில், உலகில் உள்ள வாழ்விடங்களை மேமம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

மேலும், பின்லாந்தில் தொழில் கல்வியில் முன்னோடியாக 24 பல்கலைக்கழகங்கள் இணைந்து லாம்க் எனப்படும், லாட்டி அப்ளைடு சயின்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி அறிவியல், பயோ இன்பர்மேட்டிக்ஸ், எம்பிஏ, இன்ஜினியரிங், வங்கியியல், சர்வதேச சட்டம், சமுதாய அறிவியல், மதவியல், கலை மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன.

இதனுடன், இருதரப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி பகுதிகளில் இணைந்து செயல்படுதல், கல்வி தகவல் பரிமற்றம், கல்வித் தகவல்கள், பாடத்திட்டங்கள், புத்தகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றம், ஒருங்கிணைந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கல்வி விவாதங்கள் நடத்துதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...