தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மரபணுத் தேர்வு குறித்த ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கோயம்புத்தூரில் "மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள்" குறித்த ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியை அக்டோபர் 14 முதல் 18 வரை நடத்துகின்றன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸ் ஆகியவை இணைந்து "மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள்" என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இந்த பயிற்சி நிகழ்ச்சி அக்டோபர் 14 முதல் 18 வரை கோயம்புத்தூரில் உள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஐசிஏஆர் ஆராய்ச்சி நிறுவனங்கள், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவின் யுஏஎஸ் பெங்களூர் ஆகிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.



தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர்.ரவிகேசவன் வரவேற்புரை வழங்கினார். வளவாளர்களான முனைவர் ராஜா ரகுபதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முனைவர் பார்த்திபன் பிரகாஷ், பிலிப்பைன்ஸ், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோரும் பங்கேற்பாளர்களை வரவேற்றனர். பயிர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இளம் ஆராய்ச்சியாளர்கள் இந்த பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் தனது தொடக்க உரையில், மரபணு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அரிசி/கோதுமையில் மரபணுத் தேர்வைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.ரவீந்திரன், தனது தலைமை உரையில், 2050-க்குள் உணவு தானிய உற்பத்தியைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காலநிலை மீள்தன்மையை அடைய பல்வேறு அழுத்த நிலைமைகளின் கீழ் அதிக விளைச்சலுக்கு பயிர்வகைகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.



தாவர உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் இ.கோகிலாதேவி நன்றியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...