கோவையில் தொடர் கனமழை: சிவானந்தா காலனியில் மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து

கோவையில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் மாலை முதல் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகரில் பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில், இன்று சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது.

மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...