இலங்கையை சேர்ந்த கோவை டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது


ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையை சேர்ந்த நிறுவனமான டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதற்கு உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் சபை உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசுக்கு கண்டணம் தெரிவித்திருந்தன.

ஆனால், இலங்கை அரசு மீது எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காமல் ஐ.நா. சபை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமான கோவையில் செயல்பட்டு வரும் டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை நிறுவனங்களை இந்தியாவிலிருந்து அகற்றப்போவதாகவும் கோஷங்களை எழுப்பியபடி பதாககைகளை கைகளில் ஏந்தி தமிழர் விடியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...