ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையை சேர்ந்த நிறுவனமான டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதற்கு உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் சபை உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசுக்கு கண்டணம் தெரிவித்திருந்தன.
ஆனால், இலங்கை அரசு மீது எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காமல் ஐ.நா. சபை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமான கோவையில் செயல்பட்டு வரும் டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை நிறுவனங்களை இந்தியாவிலிருந்து அகற்றப்போவதாகவும் கோஷங்களை எழுப்பியபடி பதாககைகளை கைகளில் ஏந்தி தமிழர் விடியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.