செம்மண் கடத்தல்: கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செம்மண் கடத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 4 அன்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


கோவை: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை இணை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ஆணைக்கட்டி உள்ளிட்ட கோவையின் பல்வேறு கிராமங்களில் செம்மண் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக யானை வழித்தடங்கள் முற்றிலுமாக அழிந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த சட்டப்பணிகள் ஆணைக்குழு, செம்மண் திருட்டு தொடர்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 600 ஏக்கர் பரப்பில் ஆய்வு செய்து வருவதாகவும், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. நீதிபதிகள் இந்த கோரிக்கையை ஏற்று, அறிக்கை தாக்கல் செய்ய நவம்பர் 4 வரை அவகாசம் வழங்கினர்.

முன்னதாக, மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக செம்மண் திருடப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதை வீடியோ கால் மூலம் நீதிபதிகளிடம் நேரடியாக காண்பித்தார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 4 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை இணை இயக்குநர் ஆகியோர் சட்டவிரோத செம்மண் கடத்தல் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...