கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி புறக்கணிப்பு, தர்ணா, சாலை மறியல், மனித சங்கிளி உள்ளிட்டு மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போராட்டம் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவ மாணவர்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...