கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். முன்னதாக அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய இவரை, உள்ளூர் பிரமுகர்கள் வரவேற்றனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இவர் சென்னை அரக்கோணம் பகுதியில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றினார்.
வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக இருந்த விநாயகம் சென்னை பகுதிக்கு பணி மாறுதலாக சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம், இன்று பொறுப்பேற்றார்.
புதிய ஆணையாளர் ரகுராமுக்கு நகராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.