கோவை: பொன்னூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை

கோவையில் தொடர் கனமழை காரணமாக, துடியலூர் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் செல்ல முடியவில்லை.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் அமைந்துள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையில் இருந்து பாயும் பொன்னூத்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கோவையில் ஏற்பட்டுள்ள இந்த கனமழையின் விளைவாக, பொன்னூத்து அம்மன் கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...