திருப்பூரில் கனமழை: சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்

திருப்பூரில் மாலை 3 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூரில் மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பழ வஞ்சிபாளையம், முத்தையன் நகர், பிச்சம்பாளையம், அங்கேரிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே மழைநீரை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காந்திநகர் அடுத்த ஃபயர் சர்வீஸ் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும் மழைநீரும் கலந்து அப்பகுதி சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நீரில் ஏராளமான குப்பைகளுடன் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. இக்காட்சி அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.



அப்பகுதி பொதுமக்கள் வெளியே நின்று குப்பைகள் தங்கள் வீட்டிற்குள் நுழையாதவாறு குச்சிகளை வைத்து தடுத்து மழைநீரில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...