கோவை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைருக்கும் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, காப்பீட்டுத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெறுகிறது.
பயனாளிகள் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் கிராமத்தில் நடைபெறும் இணைப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இணைப்பு முகாம் நடைபெறும் நாள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும். அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, காப்பீட்டுத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெறுகிறது.
பயனாளிகள் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் கிராமத்தில் நடைபெறும் இணைப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இணைப்பு முகாம் நடைபெறும் நாள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும். அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.