கோவை மாநகராட்சியில் நகர சுகாதார செவிலியர்கள் நேர்காணல் நவம்பர் 11-க்கு ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியாளர்களுக்கான நேர்காணல் கடும் மழை எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 18-லிருந்து நவம்பர் 11-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியாளர்கள் (நிலையச்செவிலியர்) காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர் கடும் மழை குறித்த வானிலை அறிக்கை எச்சரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நேர்காணலுக்கு வரும் நபர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அக்டோபர் 18 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த நேர்காணல், தற்போது நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திவைப்பு முடிவு குறித்து மாநகராட்சி ஆணையர் அக்டோபர் 16 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்காணலுக்கு வரவிருந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...