செம்மேடு கிராமத்தில் கடையை உடைத்து அரிசி உண்ட காட்டு யானை: பெண்ணின் வேண்டுகோள் வீடியோ வைரல்

கோவை செம்மேடு கிராமத்தில் காட்டு யானை கடையை உடைத்து அரிசி உண்டது. பெண் ஒருவர் யானையிடம் வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.


Coimbatore: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூண்டி, வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள செம்மேடு கிராமத்தில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஒரு காட்டு யானை நுழைந்து கடையை உடைத்து அரிசி மூட்டையை உண்டு சேதம் விளைவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு பெண் யானையை நோக்கி, "சாமி போயிடு, போ, போ" என்று கூறி கையெடுத்து கும்பிட்டதாக தெரிகிறது. இந்த காட்சி அருகில் இருந்தவரால் செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



கடந்த சில மாதங்களாக செம்மேடு கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன. இதனைத் தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவது நிற்கவில்லை.

நேற்றிரவு நடந்த சம்பவத்தில், ஒரு ஒற்றை யானை கிராமத்திற்குள் நுழைந்து, ஒரு கடையை உடைத்து 25 கிலோ அரிசி மூட்டையை சாக்குப் பையுடன் உண்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மூன்று வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானைகளின் தொடர் நுழைவைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...