மேயர் மற்றும் ஆணையாளர் கோவையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர்

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். குளம் தூர்வாருதல், மழைநீர் வடிகால் அமைத்தல், பாதாள சாக்கடை புதுப்பித்தல் போன்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சியின் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் தூர்வாருதல் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மேயர் மற்றும் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.



அதே மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக 32-HP மின் மோட்டார்கள் அமைக்கப்படும் பணியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



மத்திய மண்டலத்தில், திருச்சி சாலை ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடையின் பழைய பிரதான குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கும் பணியை ஆணையாளர் ஆய்வு செய்தார். இப்பணி நவீன முறையில் (Trench Less Method) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.



அதே மண்டலத்தில் உள்ள திருச்சி சாலை நிர்மலா கல்லூரி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



மேற்கு மண்டலத்தில் உள்ள சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 18 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணியையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப் பணிகளில் கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் ஆதிமகோஸ்வரி, சிங்கை சிவா, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், உதவி ஆணையர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மாமன்ற உறுப்பினர் பேபிசுதா, உதவி பொறியாளர் ஹரிபிரசாத், பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...