சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பாத்திரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதல்வர் பிறந்தநாள் விழாவுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த இவற்றின் மதிப்பு ரூ.40,000.


Coimbatore: சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 800 சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் சார்பில் பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரி அகிலாண்டேஸ்வரி தலைமையிலான குழுவினர் இருகூர் செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள கலாமணி என்பவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, சுமார் 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பல்வேறு சில்வர் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பாத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் 40,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அண்டாக்களுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், எந்தவொரு அரசியல் கட்சியும் பரிசுப் பொருட்களை வழங்க முடியாது என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...