சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பாத்திரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதல்வர் பிறந்தநாள் விழாவுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த இவற்றின் மதிப்பு ரூ.40,000.


Coimbatore: சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 800 சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் சார்பில் பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரி அகிலாண்டேஸ்வரி தலைமையிலான குழுவினர் இருகூர் செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள கலாமணி என்பவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, சுமார் 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பல்வேறு சில்வர் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பாத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் 40,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அண்டாக்களுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், எந்தவொரு அரசியல் கட்சியும் பரிசுப் பொருட்களை வழங்க முடியாது என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...