ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக பல விமான வழித்தடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Coimbatore: ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை அடுத்து, கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் தற்போது மூன்று வெளிநாடு விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. ஏர் அரேபியா நிறுவனம் மூலம் ஷார்ஜா, ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் சிங்கப்பூர், இண்டிகோ நிறுவனம் மூலம் அபுதாபி ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றில், கோவை-ஷார்ஜா இடையிலான விமான சேவை மார்ச் 1 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மார்ச் 9ல் ஒரு நாள் விமான சேவை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாரத்தில் ஐந்து நாட்கள் வீதம் ஷார்ஜாவுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூருக்கான விமான சேவைகள் வழக்கம் போல் தினமும் தடையின்றி இயங்கி வருகின்றன.
ஆனால், இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை-அபுதாபி இடையே செயல்பட்ட விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது: "கோவை-அபுதாபி இடையே விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக தற்போது வரை தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. மார்ச் 28 வரை இந்த விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."
"பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மார்ச் 28க்கு பிறகு விமான சேவைகள் தொடங்கப்படுமா என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் அல்லது இண்டிகோ நிறுவன அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்" என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் வழித்தடங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்நிலையில், சர்வதேச நிலைமை சீரடைந்த பிறகு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் தற்போது மூன்று வெளிநாடு விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. ஏர் அரேபியா நிறுவனம் மூலம் ஷார்ஜா, ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் சிங்கப்பூர், இண்டிகோ நிறுவனம் மூலம் அபுதாபி ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றில், கோவை-ஷார்ஜா இடையிலான விமான சேவை மார்ச் 1 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மார்ச் 9ல் ஒரு நாள் விமான சேவை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாரத்தில் ஐந்து நாட்கள் வீதம் ஷார்ஜாவுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூருக்கான விமான சேவைகள் வழக்கம் போல் தினமும் தடையின்றி இயங்கி வருகின்றன.
ஆனால், இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை-அபுதாபி இடையே செயல்பட்ட விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது: "கோவை-அபுதாபி இடையே விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக தற்போது வரை தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. மார்ச் 28 வரை இந்த விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."
"பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மார்ச் 28க்கு பிறகு விமான சேவைகள் தொடங்கப்படுமா என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் அல்லது இண்டிகோ நிறுவன அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்" என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் வழித்தடங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்நிலையில், சர்வதேச நிலைமை சீரடைந்த பிறகு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.